Tuesday, August 26, 2014


ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதாங்க கொஞ்சம் Time கிடைச்சுது.
இனி தொடர்ந்து என் எண்ணச் சிதறல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.



மனம் என்றால் என்ன?

உலகின் புரிந்து கொள்ளக்கடினமாக எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று மூளை.
அம் மூளையால் உருவாக்கப்பட்ட கற்பனை இயந்திரமே மனம்.
மூளையால் உருவாக்கப்பட்ட மனம் மூளையினுள் அமையவில்லை என்பது ஏனென்று தெரியவில்லை.
அப்ப அது எங்க தான் இருக்கு? (குசும்புக்காரன்: தெரிஞ்சா சொல்ல மாட்டமா? அவ்வ்வ்!)
எனக்கு கவலை வரும் போதெல்லாம் மார்புப்பகுதியில் இனம் புரியா வலி ஏற்படுகின்றது. என்னுடைய மூளை என் மனதை அங்கு தான் ஸ்தாபித்திருக்க வேண்டும்.
ஒரு சிலருக்கு அவ்விடம் வேறுபடலாம்.

மனதிற்கும் மூளைக்கும் மிகவும் உறுதியான பிணைப்பும் உள்ளது, இடைவெளியும் உள்ளது.
இது மிகவும் சிக்கலான ஓர் விடயம்.
மூளை மிகவும் ஒரு சிக்கலான கட்டமைப்பாக அறியப்படுகிறது. ஆனால் மூளையால் உருவாக்கப்பட்ட கற்பனை இயந்திரமான இம் மனம் மூளையையே தன் கட்டிற்குள் கொண்டு வருகிறது என்றால் மனம் எவ்வளவு சிக்கலான கட்டமைப்பு என்பதை சொல்லத்தேவையில்லை.

இங்கு இன்னொரு விடயம் என்னவென்றால் மிகவும் சிக்கலான கட்டமைப்பை உடைய மூளையால் உருவாக்கப்பட்ட மனம் அம் மூளையை கட்டுப்படுத்தும் அளவிற்கு சிக்கலானதென்றால் அம் மனதைப்பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தும் மூளை மேலும் சிக்கலான ஒன்றாக இருக்க வேன்டும்.
ஆனால் மிகவும் சிக்கலான அமைப்பான மூளையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மனமும் மாபெரும் சிக்கலாக இருக்க வேண்டும் என்பதில்லையே ! ( குசும்புக்காரன்: பல நேரங்களில் தீர்வு எளிமையாக இருக்க நாம் சிக்கலான ஒன்றை நோக்கி பயணித்து தீர்வை மேலும் சிக்கலாக்குவது போலத்தான்.) 

ஒரு வேளை மனம் மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கலாம். அவ் எளிமைக்குள் மாபெரும் சிக்கல் இருப்பதை மறுக்க இயலாது.

மனம்,  சிக்கலானதா? 
               எளிமையானதா?
   இதன் தீர்வு மனதிடமே உள்ளது.

என்னப் பொறுத்த வரையில் இது மிகவும் எளிமையான சிக்கல் கட்டமைப்பு.
இது இவ்வளவு சிக்கலாக இருக்க காரணம் இது செயல் உருவம் அற்றதாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்.
(குசும்புக்காரன்: கண்ணுக்கு தெரிவதே ரொம்பச் சிக்கலா இருக்கு,இதுல இது கண்ணுக்கே தெரியாதாம்ல....வெளங்கிடும்...)





பிற் குறிப்பு: குசும்புக்காரன் வேற யாருமில்லைங்க. நம்ம பயல் தான். அடிக்கடி மண்டைக்குள்ள இருந்து எட்டிப்பார்த்து ஏதாவது கேள்வியக் கெளப்பி விட்றுவான்.அப்புறம் நாந்தான் திணற வேண்டியிருக்கும்.


இவையனைத்தும் என் சுய ஆராய்ச்சிகள்.
நீங்களும் உங்க்ள் கருத்தை பதிவிடலாம்.


Categories: ,

4 comments:

  1. aanmaa vin shakthy patriyum oru aaiyu seiyalame

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நண்பரே. ஆன்மாவைப் பற்றி 2 வருடத்திற்கும் மேலாக ஆராய்ந்துள்ளேன். ஆன்மாவின் தேடலில் எனக்கேற்பட்ட அனுபவங்களையும் சேர்த்து பதிவிடவுள்ளேன். காத்திருங்கள்
      வருகைக்கு நன்றி நண்பரே.

      Delete
  2. negaal Quran & allah veum araidal.. melum pala unmaigal puriye vaipu ulledu.. uggal muyatchikku anedu paratukkal.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete

உங்கள் பொன்னான கருத்தை பதிவிட்டு தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.