Saturday, August 30, 2014

பிரச்சனையை எதிர்கொள்ளல்

Posted by Saruban On Saturday, August 30, 2014

பொதுவாக பிரச்சனைகளே மனிதனின் மனநிலையை மாற்றி பாதிப்பை தேடித்தருகிறது.





ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள அத்தருணத்தில் நாம் இருக்கும் மனநிலை ரொம்ப முக்கியம்.
நம் மனநிலை இருக்கும் நிலையைப் பொருத்தே அப்பிரச்சனையின் விளைவு எம் மனதை தாக்கும் அளவு அதாவது வெயிட்டேச்சும் மாறுபடும்.

சிக்கல்களுக்குள் நாம் சிக்கித்தவிக்கும் வேளையில் மூளையின் தர்க்கத்திற‌னை நம் மனநிலை குறைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.
அந்நேரத்தில் நிலைமையை புரிந்து கொண்டு அப்பிரச்சனையை மூளையின் உதவியுடன் அனுக வேண்டும்.
அது அவ்வளவு எளிதல்ல,ஆனால் தொடர் முயற்சியால் எதுவும் கைகூடும்.
எந்தவொரு விடயத்தை அனுக முன்னும் நொடிபொழுதில் அதன் விளைவு பற்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதுவே பல பிரச்சனைகளை தவிர்த்து விடும்.
நாம் முதலில் நம் மனதினுள் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை துடைத்தெறிய வேண்டும்.
குப்பைகள் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் நமக்கு தேவையான பொருட்களை வைப்போமா?
இல்லை தானே.
நமக்குள் இருக்கும் மகத்தான சக்தியை உணர்ந்தால் எந்தவொரு தேவையற்ற / தீய எண்ணங்கள் நம்முள் வராது.

முந்தய பதிவொன்றில் மனதினுடைய சக்தி பற்றி அறியத்தந்திருந்தேன்.
மாபெரும் அகச்சக்தியை கொண்டுள்ள நாம் வீணாக பயனற்ற செயல்களை செய்து எம் சக்தியை வீணாக்க வேண்டுமா? அல்லது நம்மை நாமே தாழ்வாக எண்ணலாமா?
அனைவரினதும் பதில் இல்லை என்றே இருக்கும்.
நம் சக்தியை புரிந்து கொண்டிருந்தும் ஏன் எம்மால் சாதிக்க முடிவதில்லை.
இங்கு கவனிக்கத்தக்கது நாம் புரிந்து கொண்டுள்ளோமே தவிர ஏற்றுக்கொள்ளவில்லை.

இவையெல்லாவற்றிற்கும் காரணமென்ன, ஆழ் மனதிடம் உள்ள அளப்பரிய சக்தியை பயன்படுத்த விடாமல் தடுத்து பொய்யான ஒன்றை கற்பனை செய்ய வைத்து நம்மை திசை திருப்புகிறது நம் மேல் மனம். மேல் மனம் ஆழ் மனதிற்குரிய பாதையாக இருந்தாலும் அனைத்தையும் அது உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை.
அதனை தீர்மானிக்க வேண்டியது நாம் தான்.
எப்பொழுதும் நம் ஆழ் மனதினுள் தாழ்வான எண்ணங்களை அனுமதிப்பது கூடாது. அது மிகவும் ஆபத்தானது.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது எவ்வளவு தூரம் உண்மை என்பதை இங்கு புரிந்துகொள்ளலாம்.

ஆழ்மனது ஒரு விடயத்தை தீர்மானித்து விட்டால் அது இலகுவில் தன்னை மாற்றிக்கொள்வதில்லை, தன்னை அதுவாகவே மாற்றிக் கொள்கிறது.
நம் மனநிலையைப் பாதிப்பதில் ஆழ்மனம் செல்வாக்குச் செலுத்துகிறது.





எப்போதும் பிரச்சனைகளைப் பற்றியே சிந்திப்பதால் பிரச்சனை இலகுவில் தீரப்போவதில்லை. அப் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்வதால் அதிலிருந்து நம்மை விடுவிக்கலாம் என சிந்திப்பதே சிறந்தது.

பிரச்சனை உருவாகக் காரணம் நாமாகவோ அல்லது நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவோ தான் இருக்கக் கூடும்.
மனிதனால் உருவாககப்பட்ட ஒரு பிரச்சனையை தீர்க்க ஒரு மனிதனால் முடியாதென நினைக்கிறீர்களா?
நிச்சயம் முடியும்.
பிரச்சனையை உருவாக்கிய மட்டத்தில் இருந்து சிந்திப்பதை நிறுத்துங்கள், அது பிரச்சனையை தீர்க்க உதவாது.
வெவ்வேறு கோணங்களில் இருந்து சிந்தியுங்கள்.
முழுமையாக உங்கள் மனதின் மகத்தான சக்தியை ஏற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்வின் வெற்றிக்காக ஆழ் மனதின் சக்தியை பயன்படுத்துங்கள்.

மீண்டும் சந்திப்போம். 
 நன்றி.

0 comments:

Post a Comment

உங்கள் பொன்னான கருத்தை பதிவிட்டு தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.